WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS....Flash News......பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>தாசின் அறக்கட்டளை சார்பில் மீண்டும் துவங்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதும் போட்டி - Photo<><>ஜும்ஆ பயான் - இஸ்லாமிய அறிவு புரட்சி<><>ஜும்மா பயான்-மதிக்கத் தக்க முதியோர்கள்<><>பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்<><>பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா


செவ்வாய், 16 அக்டோபர், 2012

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

நமதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக நமதூரில் குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது:


17/09/2012 15:14நமதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக நமதூரில் குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது:

ராமநாதபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயம்



ராமநாதபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயம்
ராமநாதபுரம், செப்.17-

ராமநாதபுரம் அருகே பிளஸ்-1 மாணவி மாயமானார். ராமநாதபுரம் அருகே உள்ள புதுவலசை கிராமத்தை சேர்ந்தவர் குப்பமுத்து விவசாயி. இவரது மகள் லட்சுமி என்ற லாவண்யா (வயது 17) இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த மாதம் 25-ந்தேதி பள்ளிக்கு சென்ற லட்சுமி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் கவலை அடைந்து பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை.

வியாழன், 13 செப்டம்பர், 2012

சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தெருமுனை பிரச்சாரம்!


சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தெருமுனை பிரச்சாரம்!

அரசியல் கட்சிகளின் இலாபங்களுக்காக இந்தியா முழுவதும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்படுவதும் அவர்களுக்கு ஜாமீன் கூட மறுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. அதோடு அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ. (சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) போன்ற காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

நமதூர் பள்ளியில் 66 ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டம்


EPMA நண்பர்கள்.


 'அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)"


"வட்டார விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக தொடங்க உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்."
குறிப்பாக

"தாசின் ட்ரஸ்ட் நிர்வாகிகள்.  

"Dr .சாதிக் அலி, அவர்கள். 

"A.ஆதம் முஹம்மத், அவர்கள். 

"EPMA நண்பர்கள்.

"இப்திஹார்  நஹீம் , அவர்கள்.
(எனக்கு தெரிந்தவர்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளேன்) மற்ற உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.

                         *****                                            *****                                     *****                                            *****

"EPMA  புதுவலசை மக்களால் U.A.E-  ல் செயல் படும் அமைப்பு. ஊரை சேர்ந்த அனைவரும் உறுப்பினரே, ஊருக்காக மட்டுமே உதவிகள் செயப் படுகிறது. இதற்காக தனியாக உறுப்பினர் சேர்கை படிவம் தேவையில்லை!.

"சம்பந்தப் பட்டநபர்களிடம் இந்த அமைப்பில் நீங்கள் இணைகின்றிர்களா? என்று கேட்கவேண்டிய அவசியமும்  எழவில்லை." அனைவரும் ஊரை சேர்ந்தவர்களே அவர்களுக்கும் உரிமை உள்ளது ஊருக்கு செய்யும் நல்ல விசயங்களில் பங்குகொள்ள.
"நல்லவிசயங்களில் கலந்து கொள்ளாதிருப்பது துரதிர்ஷ்டமானது."

" தனியாக, ஒரே நபராக உதவிகள் செய்ய கூடியே, செய்து கொண்டும். உள்ள எத்தனையோ நல்ல உள்ளங்கள்." அமைப்பு என்று வரும்போது ஒதுங்குவது இல்லை.
அதிலும் என்னுடைய  பங்கு இருக்கவேண்டும் என்று பங்கெடுத்துக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.
"தனியாக செய்வதையும், அமைப்பின் மூலமாக செய்யப்படுவதையும்," போட்டு குழப்பி கொள்வதில்லை.
"மிக தெளிவான எண்ணங்கள், புரிதல்கள்."

"இந்தாண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு."

"வட்டார விளையாட்டுப்போட்டிக்கு நிதி."

"எந்த வருடமும் இல்லாத அளவிற்கு  ஃபித்ரா இந்த வருடம் மிக அதிகமாக epma சார்பாக  கொடுக்க பட்டு உள்ளது."

"இது அனைத்தும் உங்கள் ஆதரவளே  நண்பர்களே"

தொடர்ந்து உங்கள் ஆதரவும், வழிகாட்டல்களும்,தொடரட்டும் EPMA வுக்கு. 

                                                          இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் 

வட்டார விளையாட்டு போட்டிகள் துவங்கியது


16/08/2012 12:07
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
ராமநாதபுரம் மாவட்ட கல்வி வட்டாரத்தில் உள்ள நான்கு ZONE களில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் இந்த முறை இராமஸ்வரம் ZONE -ல் உள்ள பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டி நமது ஊரில்13 மற்றும் 14 தேதி நடைபெற்றது இதில் 13 தேதி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது, 14 தேதி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.New Games: 16/08/12 (Boys & Girls)

puduvalasai.in/news  thanks

நமதூர் பள்ளியில் 66 ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டம்


16/08/2012 12:12
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
66 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது அரபி ஒலியுல்லாஹ் உயர்நிலை பள்ளியின் சார்பாக கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது , கொடியேற்றம் நிகழ்ச்சிக்கு வருபவர்களை வரவேற்கும் விதமாக நமது பள்ளியின் JRC படையினர் வரவேற்றனர் பள்ளியின் வாயிலில். மற்றும் முஸ்லிம் தர்ம பரிபாலன சபை தலைவர் ஜனாப்.கபீர் அவர்கள் கொடியேற்றி மரியாதையை செய்தார்கள், அதனை தொடர்ந்து ஜனாப். தையுப் கான் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரை நிகழ்த்தினார்கள்.


puduvalasai.in/news  thanks


இன்று காலை 10.30 மணியளவில் அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப்பள்ளியில் இராமேஸ்வரம் வட்டார விளையாட்டுப் போட்டி சார்பான ஃபிக்ஸர் கூட்டம் நடை பெற்றது.அக்கூட்டதிற்கு மாவட்ட் விளையாட்டு ஆய்வாளர் தலைமை தாங்கினார்.தாளாளர் ஜனாப்.எஸ்.லியாக்கத் அலிகான் அவர்களும் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு.மு.அன்வர் பாதுஷா அவர்களும் முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியர் திரு.சா.சி.சீதக்காதி மரைக்காயர் அவ்ர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.நண்பகல் 1.30 மணி வரை கூட்டம் நீடித்தது.







பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்

புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் சிறப்பான பரிசளிப்பு விழா நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வருடம் சற்று சிறப்பாக EPMA அமைப்புடன், 




















தாசின் அறக்கட்டளை சார்பில் மீண்டும் துவங்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதும் போட்டி - Photo


01/08/2012 20:54
அல்லாஹ்வின் திருப்பெயரால்....
நமதூர் தாசின் அறக்கட்டளை சார்பில் கடந்த வருடம் சில பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தாசின் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டு வந்த திருக்குர்ஆன் ஓதும் போட்டி இந்த வருடம் மீண்டும் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.


puduvalasai.in thails


பாஸ்போர்ட்டு அப்ளே செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க !

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும்தேவைபடாது என்று தெரிந்து விட்டதுநம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில் இந்த பதிவை உருவாக்கிய அந்த சகோதரர்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்டு பதிவிர்க்குள் செல்வோம்
ஒகே ரெடி ஸ்டார்ட்.
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்https://passport.gov.in/pms/Information.jsp

Continue 
என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசாரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணாபெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்


பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்துபுதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[]    கண்டிப்பாக எழுதவும் []    தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லுமஉங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்துபிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும்போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும்.  அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.


முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

·         ரேசன் கார்டு
·         குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
·         தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
·         மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
·         கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
·         வாக்காளர் அடையாள அட்டை
·         வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
·         துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

·         1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
·         பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
·         கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு  சான்றிதல்கள்

·         10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காதுஅதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
·         உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
·         பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.  குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டுஅன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள்அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மைமுன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும்ஆதலால் நன்றாய்சாப்பிட்டுவிட்டுதண்ணீரை எடுத்து செல்லவும்.


அவ்வளவுதான் முடிந்தது மேலும்  தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். :)

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா

புதுவலசை : நமதூர் அரபி ஒலியுல்லாஹ்வின் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் முகமாகவும் சிறப்பான பரிசளிப்பு விழா நமதூர் மதரஸா வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில் செயல்பட்டுவரும் நமதூர் வாசிகளுக்கான அமைப்பின் மூலமாக பரிசுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வருடம் சற்று சிறப்பாக EPMA அமைப்புடன், தாசின் அறக்கட்டளையும் மற்றும் நமதூர் முஸ்லிம் தர்ப பரிபால சபையும் இணைந்து முப்பெரும் விழாவாக வெகு விமர்செய்யாக பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் முஸ்லிம் தர்ம பரிபாலன சபைகளின் .கவுரவ தலைவர் ஜனாப். தையூப் கான் அவர்கள் தலைமை வகிக்க, ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகிக்க பரிசளிப்பு விழா சிறப்பாக துவங்கியது. இதில் தாசின் அறக்கட்டளையின் நிறுவனர் ஜனாப். தாசின், பள்ளிகளின் தாளாளர் ஜனாப். லியாகத் அலி கான், EPMA-வின் செயலாளர் ஜனாப். ஜாபிர் ஹுசைன், நமது ஊராட்சிகளின் செயல் தலைவர் ஜனாப். ஜபருல்லாஹ் கான், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஜனாப். சிக்கந்தர் சீதக்காதி மறைக்காயர், மற்றும் திரு. ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.



இந்த கல்வியாண்டில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கும், 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும், MDPS, EPMA, தாசின் அறக்கட்டளை நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை முஸ்லிம் தர்ம பரிபாலன சபை செயலாளர் ஜனாப். ஜகுபர் சாதிக் தொகுத்து வழங்கினார். புதுவலசை வாழ் ஜமாத்தார்கள், சங்கத்தார்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னால் ஜமாஅத் செயலாளர் ஜனாப். நிஜாமுதீன் நன்றியுரை கூற பரிசளிப்பு விழா இனிதே நிறைவுற்றது.


ஜமாஅத் தலைவர் ஜனாப்.என்.அஹமது கபீர் அனர்கள் தலைமை உரை ஆற்றுகிறார்.











appakuttypvs.com



8/3/2012 puduvalasai