WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS....Flash News......பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா கடந்த 12 வருடமாக EPMA (Emirates Puduvalasai Muslim Assosiation) அமீரகத்தில்<><>தாசின் அறக்கட்டளை சார்பில் மீண்டும் துவங்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதும் போட்டி - Photo<><>ஜும்ஆ பயான் - இஸ்லாமிய அறிவு புரட்சி<><>ஜும்மா பயான்-மதிக்கத் தக்க முதியோர்கள்<><>பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம்<><>பத்தாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா


வியாழன், 13 செப்டம்பர், 2012

சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தெருமுனை பிரச்சாரம்!


சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! புதுவலசையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தெருமுனை பிரச்சாரம்!

அரசியல் கட்சிகளின் இலாபங்களுக்காக இந்தியா முழுவதும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்படுவதும் அவர்களுக்கு ஜாமீன் கூட மறுக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகின்றது. அதோடு அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ. (சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) போன்ற காட்டுமிராண்டித்தனமான சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

இப்படி கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுவிக்ககோரி சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பிரச்சாரம் செய்து வருகிறது.


இப்பிரச்சாரத்தில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல், கையேடுகள் வினியோகம், போஸ்டர் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், தெருமுனைக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுவலசையில் 08.09.12 அன்று மாலை 7 மணி அளவில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரியாஸ் அஹமது வரவேற்புரை  நிகழ்த்தினார். மாநில பேச்சாளர் சகோதரர் அப்துல் ஜமீல் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். நமதூர் ஜமாத்தார்கள், சங்கத்தார்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர் சலீம் அஹமது தொகுத்து வழங்கினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக